திங்கள், 13 ஆகஸ்ட், 2012

செய்யும் தொழில் தெய்வமாகுமா?

ஒருவன் இவ்வுலகில் வாழத் தேவையான பொருட்களை பெற தனக்கு தெரிந்த அல்லது பிறரால் தெரிவிக்கப்பட்ட தொழிலை செய்து பிழைக்கிறான். அவ்வாறு அவன் பிழைப்புக்காக செய்யும் தொழில் அவனுக்கு தெய்வமாகுமா? ஒரு விவசாயின் மகன் படித்து ஒரு ஆசிரியராகவோ அல்லாதோ ஒரு பிறிதொரு தொழிலை செய்கிறான் என்றால் அவனுக்கு தெய்வம் விவசாயமா அல்லது அவன் தற்பொழுது செய்யும் தொழிலா? அதே போல் தொழில் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களையும் தெய்வமாக பார்ப்பார்கள். அந்த பொருட்கள் மீது கால்(மிதிக்க) வைக்கமாட்டார்கள். உழவு செய்யும் ஏரை உழவன் காலால் மிதித்தால் தானே ஆழமாக உழ முடியும்,  அப்படி என்றால் ஏர் உழவனுக்கு தெய்வமில்லையா?

செய்யும் தொழில் தெய்வம், தொழிற்கருவிகள் தெய்வம் என்று சொல்வது சமூகத்தில் பிறர் செய்ய கூச்சப்படும் தொழிலை செய்ய நிர்பந்திக்கப்பட்ட தொழிலாளர்களை பரம்பரையாக அந்த தொழிலை தொடர சொல்லப்பட்ட ஏமாற்று வித்தையே. அதனை அவரவர்கள் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். கணிப்பொறியில் வேலை செய்பவனுக்கு வேண்டுமானால் கணிப்பொறியும் மற்ற பொருட்களும் தெய்வமாக இருக்கலாம். ஆனால் சாக்கடை அல்லும், முடி திருத்தும் போன்ற தொழிலாளர்களுக்கு சாக்கடையும், பிறரின் முடியும் தெய்வமாகுமா? இதன் தொடர்ச்சி தானே ஆயுத பூசை... கணிபொறி போன்ற ஆயதங்களை வீட்டில் வைத்து பூசை பண்ணலாம்.... சாக்கடையும் முடியையும் வைத்து பூசை பண்ணுவார்களா?
இது போன்ற கதைகளை சொல்லியே நம்மையெல்லாம் முட்டாக்கியவர்கள் யாரோ? இதனையே தொடர் கதையாக்கி தொழிலை வைத்து சாதி எனும் நச்சையும் சமூகத்தில் பரப்பிவிட்டனர். அறுபது வயது முடிதிருத்தும் நபரை மற்றொரு சாதியை சேர்ந்த சிறுவன் மரியாதையில்லாமல் வாடா போடா என்று அழைப்பது இந்த "செய்யும் தொழிலே தெய்வம்" எனும் வார்த்தையின்  விளைவே..... முதலில் இதனை ஒழிப்போம்.... 

1 கருத்து: