ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அமெரிக்காவில் துப்பாக்கி சூடும் சீனாவில் கத்தி குத்தும்.



கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் connecticut-ல் உள்ள ஆரம்ப பள்ளியில் ஒரு 20 வயது இளைஞன் மிருகத்தனமாக சுட்டதில் 20 குழந்தைகள் (6 மற்றும் 7 வயது) உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அந்த இளைஞன் மூன்று துப்பாக்கிகள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதே வெள்ளிக்கிழமை சீனாவில் உள்ள ஆரம்பபள்ளியில் ஒரு 36 வயது மனித மிருகம் கத்தியால் 22 குழந்தைகளை குத்தியுள்ளான். இதில் யாரும் உயிரிழக்கவில்லை.

இரண்டு கொடூர சம்பவங்களும் ஒரே நாளில், வெவ்வேறு கலாச்சாரம் உள்ள வெவ்வேறு இடத்தில் நடைபெற்றது. ஒரு இடத்தில் அதிக உயிரழப்புகள் மற்றொரு இடத்தில் பலர் காயம். இதற்கு என்ன காரணம்?

இந்த இரண்டு சம்பவங்களிலும் மனிதம் தொலைந்தது முதல் காரணம், அவை பொதுவானது. பாரிய உயிரழப்புக்கு காரணம், அந்த மிருகம்  பயன்படுத்திய ஆயுதங்கள் தான் காரணம்.

அமெரிக்க மக்களில் 100 பேருக்கு 88.8 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். துப்பாக்கி மிக எளிதில் ஒரு உயிரை எடுக்கும் ஆயுதம், இதனை மக்களில் பல பேருக்கு கொடுத்தால்  இது போன்ற சம்பவங்களை எப்படி தடுக்க  முடியும்?

அமெரிக்காவில் இது போல் கிறுக்கத்தனமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் புதிதல்ல. இத்தனை சம்பவங்கள் நடந்தும் அமெரிக்க அரசு ஏன் துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்கவில்லை? அமெரிக்க அதிபர்  கண்ணீர் விடு அழுகிறாரே ஒழிய, சட்டத்தை கடுமையாக்க முயற்சிப்பது மாதிரி தெரியவில்லை.

முட்டாப்பயலுக கூட்டத்துக்கு குரங்கு நாட்டாமை.

http://www.cnn.com/2012/12/15/world/asia/china-us-school-attack/index.html?hpt=hp_c2

http://edition.cnn.com/2012/12/14/world/asia/china-knife-attack/index.html

சனி, 15 டிசம்பர், 2012

ரஜினி என்னும் வணிகப்பொருள்

ஒரு நடிகனின் பிறந்தநாளை டிவி நிறுவனங்களில் இருந்து சாமானிய மக்கள் வரை எல்லோரும் கொண்டாடடியாச்சு. வெறும் ஒரு நடிகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது நாம் மட்டுமே.

கடந்த மூன்று நாட்களாக நடந்தவைகளை பார்க்கும் பொது எனக்கு ரஜினி என்ற மனிதனோ அல்லது நடிகனோ தெரியவில்லை. மாறாக ரஜினி என்ற ஒரு வணிகப்பொருள் தென்பட்டது.

சந்தையில் நல்ல விலைக்கு போகும் என்ற பொருளை மட்டும் தான் வியாபாரிகள் அதனை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்வார்கள். அதே போல் அனைத்துப் பத்திரிக்கைகளும் இன்று ரஜினி பிறந்தநாள், ரஜினி இன்று தந்து ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்கள் ரஜினி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்கள். என்று ஏராளமான செய்திகள்.

அதே போல் சமூக வலைத்தளங்களிலும் படித்தவர்கள் ஒரு நடிகனின் பிறந்தநாளை தனது பிறந்தநாளை விட மிக விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் நாள் முழுக்க ரஜினி, ரஜினி என்றே பிதற்றினார்கள். அவர்களுக்கு டி.ஆர்.பி ஏறனும்  அதனால இந்த ரஜினி மோகப்போருளை முன்வைத்து நிகழ்ச்சிகளை செய்கிறார்கள்.

ரஜினி பிறந்தநாளுக்காக ஒரு பாடலை போட்டு அதில் காசு பார்க்கிறார்கள். நான் எதோ அவரின் பிறந்தநாள் பரிசு என்று  நினைத்தேன், ஆனால் அதிலும் காசு பார்கிறார்கள். இதே போல் தான் ரஜினி 25 என்ற நூலை போட்டு பணம் சம்பாதித்தார்கள். ரஜினியும் தனது பிறந்தநாள் செய்தியில் எல்லோரும் தந்து அடுத்த படமான "கொச்சடையனை" பார்த்து கொண்டாடுங்கள் என்கிறார்.

ஒரு வியாபாரிக்கு ஒரு பொருளை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று நன்றாக தெரியும். அதே போல் நாமளும் நல்ல விளம்பரத்தை பார்த்து சில பொருள்களை வாங்குகிறோம். எல்லோருக்கும் தெரிகிறது ரஜினி என்பது ஒரு சிறந்த மோகப்பொருள், அதன் பெயரில் என்ன செய்தாலும் குறைந்தது 25% மக்கள் பார்ப்பார்கள், வாங்கவும் செய்வார்கள் என்ற நோக்கத்தில் ரஜினி என்ற பொருள் விளம்பரபடுத்தபடுகிறது. அதனால் இங்கு ரஜினி என்ற மனிதனும் தெரியவில்லை நடிகனும் இல்லை ஒரு பொருள் மட்டுமே விற்கப்படுகிறது.

இந்த வியாரிகள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நம்முடைய பொருள் மோகம் தான் காரணம். சினிமா என்பது ஒரு பொழுது போக்கு , அதில் நடிப்பவர்கள் காசுக்காக பல வேடங்களை போட்டு நம்மை மகிழ்விப்பவர்கள் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம், இது தான் அவர்களுக்கு வசதியாய் போகிறது. அதனால் தான் நடிகன்  தலைவன்ஆகிறான்.

நடிகனுக்கு கூடும் கூட்டம், வரும் செய்திகள் மற்றும் பல விடயங்கள் ஏன் ஒரு சமூகப்போராளிக்கு கிடைப்பதில்லை?

ஒவ்வொரு சமூகப்போராளியையும் சாதித் தலைவராய் மாற்றிவிட்டு அவர்களின் சேவைகளை அசிங்கபடுத்தும் இதே சூழலில் நடிகர்களை மட்டும் தூக்கி கொண்டாடுவது ஏன்?

12ந்தேதி ரஜினி பிறந்தநாள் என்றால் 11ந்தேதி என்ன என்று பல பேருக்கு தெரியாது. தெரிந்தவர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை. அந்த நபரை ஒரு மோகப்பொருளாக்க ஆட்கள் இல்லை, விளம்பரம் செய்ய டிவிக்கள்/ பத்திரிக்கைகள் தயாரில்லை.

இந்த மோகம் நிச்சயமாக அடுத்த தலைமுறைக்கு இந்தளவுக்கு வராது என்பதுதான் இப்போதைக்கு ஒரு ஆறுதலான விடயம்.



புதன், 12 டிசம்பர், 2012

மகாகவி பாரதியார் பிறந்தநாள்

இலக்கணத்தில் இலக்கியம் எழுதாமல் இலக்கியத்தில் இலக்கணம் எழுதிய பாமர கவிஞர் மகாகவி பாரதி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தமிழில் உள்ள இலக்கியங்களை படித்து புரிந்து கொள்ள ஒரு தனிப் பள்ளிக்கூடம் போக வேண்டும். அதை மாற்றியவன் பாரதி. சாதிப்பித்துப் பிடித்த சமொக்கத்தில் பிறந்தாலும் "சாதிகள் இல்லையடிப் பாப்பா, குலத்தாழ்ச்சி செய்தல் பாவம்" என்று பாடியவன் பாரதி.

ஒவ்வொரு மனிதனும் இந்த மானுடம் செழிக்க வாழசொன்னவன் பாரதி.

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?


என்று மறவன் பாடுவது போல் அழகாக பார்ப்பானை பற்றி சொன்ன பார்ப்பான் பாரதி பிறந்த நாள் இன்று.

பாரதி மேலும் குறைகள் உண்டு. தமிழில் சமஸ்கிருதத்தை கலந்து எழுதியது, தனது செயல் எல்லாவற்றிற்கும் கடவுள் என்ற இல்லாததை காரணம் காட்டியது.

ஆனால் அவரின் கவிதை வரிகள் இந்தனை புறந்தள்ளி அவரை ஒரு மகாகவி என்று சொல்ல வைப்பது யாராலும் மறுக்கமுடியாது.



 

கடவுள் என்ற மாயத்தோற்றம்