ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அமெரிக்காவில் துப்பாக்கி சூடும் சீனாவில் கத்தி குத்தும்.



கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் connecticut-ல் உள்ள ஆரம்ப பள்ளியில் ஒரு 20 வயது இளைஞன் மிருகத்தனமாக சுட்டதில் 20 குழந்தைகள் (6 மற்றும் 7 வயது) உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அந்த இளைஞன் மூன்று துப்பாக்கிகள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதே வெள்ளிக்கிழமை சீனாவில் உள்ள ஆரம்பபள்ளியில் ஒரு 36 வயது மனித மிருகம் கத்தியால் 22 குழந்தைகளை குத்தியுள்ளான். இதில் யாரும் உயிரிழக்கவில்லை.

இரண்டு கொடூர சம்பவங்களும் ஒரே நாளில், வெவ்வேறு கலாச்சாரம் உள்ள வெவ்வேறு இடத்தில் நடைபெற்றது. ஒரு இடத்தில் அதிக உயிரழப்புகள் மற்றொரு இடத்தில் பலர் காயம். இதற்கு என்ன காரணம்?

இந்த இரண்டு சம்பவங்களிலும் மனிதம் தொலைந்தது முதல் காரணம், அவை பொதுவானது. பாரிய உயிரழப்புக்கு காரணம், அந்த மிருகம்  பயன்படுத்திய ஆயுதங்கள் தான் காரணம்.

அமெரிக்க மக்களில் 100 பேருக்கு 88.8 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். துப்பாக்கி மிக எளிதில் ஒரு உயிரை எடுக்கும் ஆயுதம், இதனை மக்களில் பல பேருக்கு கொடுத்தால்  இது போன்ற சம்பவங்களை எப்படி தடுக்க  முடியும்?

அமெரிக்காவில் இது போல் கிறுக்கத்தனமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் புதிதல்ல. இத்தனை சம்பவங்கள் நடந்தும் அமெரிக்க அரசு ஏன் துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்கவில்லை? அமெரிக்க அதிபர்  கண்ணீர் விடு அழுகிறாரே ஒழிய, சட்டத்தை கடுமையாக்க முயற்சிப்பது மாதிரி தெரியவில்லை.

முட்டாப்பயலுக கூட்டத்துக்கு குரங்கு நாட்டாமை.

http://www.cnn.com/2012/12/15/world/asia/china-us-school-attack/index.html?hpt=hp_c2

http://edition.cnn.com/2012/12/14/world/asia/china-knife-attack/index.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக