புதன், 12 டிசம்பர், 2012

மகாகவி பாரதியார் பிறந்தநாள்

இலக்கணத்தில் இலக்கியம் எழுதாமல் இலக்கியத்தில் இலக்கணம் எழுதிய பாமர கவிஞர் மகாகவி பாரதி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தமிழில் உள்ள இலக்கியங்களை படித்து புரிந்து கொள்ள ஒரு தனிப் பள்ளிக்கூடம் போக வேண்டும். அதை மாற்றியவன் பாரதி. சாதிப்பித்துப் பிடித்த சமொக்கத்தில் பிறந்தாலும் "சாதிகள் இல்லையடிப் பாப்பா, குலத்தாழ்ச்சி செய்தல் பாவம்" என்று பாடியவன் பாரதி.

ஒவ்வொரு மனிதனும் இந்த மானுடம் செழிக்க வாழசொன்னவன் பாரதி.

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?


என்று மறவன் பாடுவது போல் அழகாக பார்ப்பானை பற்றி சொன்ன பார்ப்பான் பாரதி பிறந்த நாள் இன்று.

பாரதி மேலும் குறைகள் உண்டு. தமிழில் சமஸ்கிருதத்தை கலந்து எழுதியது, தனது செயல் எல்லாவற்றிற்கும் கடவுள் என்ற இல்லாததை காரணம் காட்டியது.

ஆனால் அவரின் கவிதை வரிகள் இந்தனை புறந்தள்ளி அவரை ஒரு மகாகவி என்று சொல்ல வைப்பது யாராலும் மறுக்கமுடியாது.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக