வெள்ளி, 1 ஜூன், 2012

எனது நூறாவது (நன்றி) பதிவு

எல்லாரும் எழுதுகிறார்கள் நாமும் எதையாவாது கிருக்குவோம் என்ற போக்கில் ஒரு ப்ளாக்கரை 2008 ல் ஆரம்பித்தேன். ஆனால் இரண்டு வருடமாக எழுதவில்லை. அப்புறம் அப்படி இப்படின்னு நூறு பதிவுகள் வரை வந்துவிட்டேன். இந்த நூறு பதிவுகளில் என்னுடைய ஆதங்கமே அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் இருக்கும் போது நம்மூர் அரசியலை, நிகழ்வுகளை பற்றி விவாதிக்க நண்பர்கள் இருந்தனர், அதனால் எழுத வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. பிறகு வேலை நிமித்தமாக வெளி நாடுகள் சென்ற போது வெறுமை வந்த போது எழுத(?) துவங்கினேன்.

நிறைய எழுதனும்னு ஆசைதான் ஆனால் கோர்வையாக எழுத தெரியாது.இந்த பதிவில் என் எழுத்துக்களை படித்த அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.


செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு - கானில்
நாவி லினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!

-பாரதிதாசன்.

2 கருத்துகள்: