சனி, 2 ஜூன், 2012

சட்டையும் கடவுளும் ஒன்று?

மனிதன் தன் உடலை மறைக்க சட்டை அணிகிறான். தன் தவறுகளை, பயத்தை மறைக்க கடவுளை பயன்படுத்துகிறான். ஒருவனுக்கு பிடித்த வண்ணச்சட்டை அடுத்தவனுக்கு பிடிக்காது. ஒரு கண்ணுக்கு காவியாக தெரிவது, இன்னொரு கண்ணுக்கு பச்சையாக ஒளிர்கிறது, அதே சட்டை இன்னொன்றுக்கு வெள்ளையாகவும், அடுத்தவனுக்கு சிவப்பு வண்ணமாக மிரட்டுகிறது. 

பூமி ஒன்று, அதனை கடவுள் படைத்தாக சொன்னால் ஒரு கடவுள்தானே இருக்க முடியும்? ஒரு பூமியை பலர் எப்படி உருவாக்கமுடியும்? உலகம் என்ன கணிப்பொறியாளர் உருவாக்கும் மென்பொருளா, ஒருவர் பண்ணியதை அடுத்தவர் காபி பேஸ்ட் பண்ண?

இதில் நீ ஏன் எனக்கு பிடித்த சட்டை போடவில்லை, உன் சட்டை எனக்கு பிடிக்கவில்லை என சண்டை. இவ்வுலத்தில் இது வரை மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், யார் கடவுள் பெரியது என நடந்த சண்டையில் தான் அதிக மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கூகுளில் religion killed more people என தேடுங்கள், இது வரை நாம் கடவுள் எனும் கற்பனையால் செய்யப்பட்ட கொடுமைகளை.............


மனித மிருகமாய் பிறந்த நமக்குள் ஏன் மதமும் சாதியையும் கலந்து, அடுத்தவர்களிடம் இருந்து நம்மை பிரிக்கவேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக