செவ்வாய், 13 நவம்பர், 2012

என்ன செய்ய இன்று தீவாளி(DIWALI)யாம்?

தொழிலாளர்களுக்கு
போனசுடன் கிடைக்கும்
விடுமுறை.

குழந்தைகளுக்கு
இனிப்புடன் கிடைக்கும்
புது ஆடை.

வியாபாரிகளுக்கு
கழிவுடன் கிடைக்கும்
இலாபம்.

சாமிகளுக்கு
கிடைக்கும்
சிறப்பு பூசை.

நகர வீதிகளுக்கு
மக்கள் நெருக்கடியில் இருந்து
தற்காலிக விடுதலை.

அரசுக்கு
சாராய விற்பனையில் கொள்ள
இலாபம்.

காவல்துறைக்கு
இரவு முழுதும்
பணி.

நாட்டின்
நாலாவது
தூணுக்கு
தூக்கம்.

வெடி செய்த
தொழிலாளர்களுக்கு தன்
கைகள் வெந்ததிற்கு
ஊதியம்.

வளி மண்டலத்துக்கு
சுகாதார கேடு.

குடிசை வீடுகளுக்கு,
பறவைகளுக்கு,
வாகனங்களுக்கு
அச்சம்.

தீபாவளி என்ற சொல்லுக்கு
தமிழாக்கம்
தீப ஒளி?


திராவிடச் சங்கங்களுக்கு
வேலை நாட்களில்
ஒன்று.

பக்கத்து வீட்டை விட
அதிக பட்டாசு வாங்கியதில்
பெருமை.

அடுத்த வருடம்
அடுத்த வீட்டை விட
அதிகம் வாங்க வேண்டும்
குறிக்கோள்.

இரண்டு நாள்
களித்து,
கழிந்து
கடன்பட்டது/ கரியாய் போனது எவ்வளவு
கணக்கு.

நானும்
தீவாளி கொண்டாடுவேன்
மதச்சார்பின்மை.

நானும்
தீவாளி கொண்டாடிட்டேன்
உயர்குடி இந்து.

தீவாளி யாருக்கு?
பைத்தியம்.

தீவாளி ஏன்
கொண்டாட வேண்டும்?
நாத்திகம்.

உனக்கு
எனது
உளங் கனிந்த தீவாளி வாழ்த்துகள்
திணித்தல்.

ஒரு இனத்தார்
அதிகாரவர்க்கத்தில்
இருந்ததினால்/இருப்பதால்
இன்று
இது அரசு விடுமுறை.


ஏன் தீவாளி(DIWALI)
கொண்டாட வேண்டும்
என்று சொல்லிவிட்டு
வாழ்த்துக்களை பகிரவும்.


என் சமூகத்தில் உள்ள ஏற்ற
தாழ்வுக்கு காரணமானவர்களின்
மகிழ்ச்சியை நான்
எப்படி பங்கிட்டுக்கொள்வது?
என் துக்கத்தை அவர்கள்
புரிந்து கொள்ளாத போது?

மதுரைக் கோவிலில்,
ஸ்ரீரங்க கோவிலில்,
மற்றும் பல.... கோவிலில்
என் தாத்தனால்
நுழைய முடியவில்லை,
இன்று நான், உன்னுடன்
சேர்ந்து தீவாளி
கொண்டாடவேண்டும்.

நானும் தீவாளி கொண்டாடுறேன்,
வா என்னோடு
வந்து
எங்கள் கருப்பசாமிக்கு
கிடா/கோழி வெட்டு
எங்கள் சோனை முத்தையாவுக்கு
மொட்டை போடு
எங்கள் காளியம்மாவுக்கு
தீச்சட்டி எடு
அப்புறம் நான் தீவாளி கொண்டாடுறேன்.

இதெல்லாம்
உன்னால் முடியாதல்லவா?
அப்புறம் ஏண்டா
என்னை தீவாளி கொண்டாடச்சொல்லுற?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக