சனி, 17 டிசம்பர், 2011

சன் டிவியின் விளம்பரம் மோகம் - தமிழரின் உரிமை பற்றி கவலை இல்லை

சுட்டி டிவியில் கொலைவெறி பாடலை வைத்து இருபது நிமிடத்திற்கு ஒரு முறை அந்த டிவிக்கு விளம்பரம் செய்கிறார்கள். இதன் மூலம் அந்த படத்திற்கும் இந்த டிவிக்கும் இலவசமாக விளம்பரம் செய்யும் இந்த பணக்கார முட்டாள்கள் ஏன் முல்லை பெரியார் அணையை பற்றிய விவரங்களை மக்களுக்கு காட்டினால் என்ன?

தமிழன் பணத்தில் டிவியை நடத்தும் இந்த பணக்கார தமிழர்கள், தமிழனுக்கு உரிய உரிமையை நிலை நாட்ட அதனை பற்றிய ஆவணங்களை ஒரு நாளைக்கு பத்து முறை காட்டினால் அந்த செய்தி அனைத்து மக்களுக்கும் பொய் சேருமல்லவா? இவர்களா செய்வார்கள் பணத்தை தின்னும் முட்டாள்கள்..... இவிங்களுக்கு தமிழனும் சண் டிவி பார்க்கணும் கேரளகாரனும் சூர்யா டிவி பார்க்கணும்.... என்ன செய்ய.. நாம் தான் இவர்களை புறக்கணிக்கனும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக