சனி, 24 டிசம்பர், 2011

லண்டன் எப்படி இருக்கும்?

Billy Elliot என்ற ஆங்கிலபடம் பார்க்கும்போது அதில் வந்த ஒரு உரையாடல்... நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி தன் மகனை நடனப்பள்ளியில் சேர்க்க Durham என்ற ஊரிலிருந்து லண்டன் செல்லும்போது மகன் தன் தந்தையிடம் கேட்பான் இவ்வாறு...
மகன்: லண்டன் எப்படி இருக்கும்?
அப்பா: எனக்கு தெரியாது.. நான் அங்கு போனதில்லை 
மகன்: ஏன்?
அப்பா: ஏன் போகணும்?
மகன்: லண்டன் நம் நாட்டின் தலைநகரம்.
அப்பா: அங்கு நிலக்கரி சுரங்கம் இல்லையே..

இந்த உரையாடல் வெட்ட வெளிச்சமாக உழைப்பாளர்களின் மன நிலையை கூறுகிறது... பணம் இருப்பவனுக்கு மட்டுமே நாடும் நாட்டு தலைநகரமும்.. அன்றாடங்காச்சி மக்களுக்கு தன் வயிறும் தன் குடும்பத்தின் வயிறு மட்டுமே தெரியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக