வெள்ளி, 23 டிசம்பர், 2011

நாடு கெட்டுப் போகுது -பட்டுக்கோட்டை

       பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
      கேடுகெட்ட கும்பலாலே-நீங்க
      கேடுகெட்ட கும்பலாலே.... ( பாடு )
      சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
      மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
      வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
      வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே
      வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
      வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
      வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... ( பாடு )
      சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
      மூடர்களின் தலைகளிலே...
      [விக்ரமாதித்தன், 1962].

பட்டுக்கோட்டையின் முத்து வரிகள்.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக