திங்கள், 19 டிசம்பர், 2011

ஜெ-சசி பிரிவு:::சந்தேகங்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் அ.தி.மு.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இது தான் அனைத்து பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்தி. நாம் மறந்து விடக்கூடாது இதேபோல் 1996 லும் நடந்தது பின் மீண்டும் இருவரும் சேர்ந்தனர். 

சந்தேகம்:

  1.  இன்னும் கொஞ்ச நாட்களில் சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ளது ஜெவின் சோசிய பற்று அனைவரும் அறிந்ததே.. இவர்களின் பிரிவு இந்தப்பெயர்ச்சி ஒரு பரிகாரமாகவே இருக்கும் இன்னும் சில காலங்களில் தோழிகள் மீண்டும் சேர்ந்து ஆட்டுவார்கள்...
  2. அல்லது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் ஜெ உள்பட அனைவரும் தண்டனை பெறுவது நிச்சயம். அதற்காக இவர்கள்(சசி) என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று ஜெ நீதிமன்றத்தில் சொல்லி தப்பித்து, பிறகு தனது பதவியை பயன்படுத்தி தன தோழியை வெளியே கொண்டு வந்துவிடுவார் ஜெ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக